இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், 5 பேரை காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.







