இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 12 பேர் பலி -பிரதமர் ரிஷி சுனக் தகவல்!

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான…

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்றுவரைத் தொடர்ந்து 19 நாட்களாக இஸ்ரேல், காசா எல்லைப் பகுதியைக் குறிவைத்து ராக்கெட்டுகள் மற்றும் குண்டுகள் வீசி தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் இருதரப்பினர் இடையே உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. போரால் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில்,  இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், 5 பேரை காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.