மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தற்போது 2,100 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 22,600 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் ஒகேனக்கல் காவிரி ஆறு வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.
நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 177 கன அடியாக இருந்த நிலையில் இரவு 2,100 கன அடியாக அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.







