தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வங்கிக் கணக்கில் இருப்புத் தொகையாக ரூ.756 கோடி இருப்பதாக வங்கியிலிருந்து மேசேஜ் வந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வீரப்புடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு தனியார் வங்கி ஒன்றில் அவர் வைத்திருக்கும் கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு ரூ.1,000 அனுப்பியிருக்கிறார்.




