2050-ம் ஆண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும் என பெண் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிது.
அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் AI போட் மூலம் தனது திருமணத்தை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளதால், அதுதொடர்பான பல இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏஐ தொழில் நுட்ப உருவாக்கத்தில் முன்னோடிகளில் ஒருவரான ஜெஃப்ரி ஹிண்டன் அதன் அபாயத்தை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றியதால் ஏஐ தொழிநுட்ப ஆபத்து குறித்து வெளிப்படையாக பேச முடியாமல் போனதாகவும், அது தொடர்பாக இதுவரை தான் மேற்கொண்ட ஆராய்ச்சி குறித்து வருத்தம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த தொழில்நுட்பத்தை முறையாக கையாளாவிட்டால் மிகுந்து ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், 2050-ம் ஆண்டில் மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என கற்பனை செய்து வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பெண் ஒருவர் . நான் ஒரு சாதாரண தாய் இல்லை, மிகுந்த செல்வாக்கு மிக்க அம்மா என அந்த வீடியோவிற்கு அவர் தலைப்பு வைத்துள்ளார்.
அதில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்” பாடத்தில் போதுமான மதிப்பெண் பெறவில்லை என தனது குழந்தையை திட்டுகிறார். மேலும் பல சிக்கலான சூழ்நிலைகளை கையாளுவது தொடர்பாக அவர் வேடிக்கையாக விவரிக்கிறார். தான் திறந்த மனது உடைய பெண் என்றும், அதற்காக ஏஐ பாய் பிரண்டை கூட்டி வந்துவிட வேண்டாம் என்றும் தனது மகளிடம் அந்த தாய் கூறுகிறார். அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ இணையத்தில் லைக்குகளை அள்ளிக்குவிக்கிறது.