31.5 C
Chennai
May 12, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி… ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,500 கனஅடியாக உயர்வு…

ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6,000 கன அடியில் இருந்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள பல்வேறு அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.528 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2-வது நாளாக 5,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading