ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எரிசக்தி முதல் ஆன்மீகம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்க்கில் உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்கை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க் தான் மோடியின் தீவிர ரசிகன் என்றும், இந்தியா மீது அதிக அக்கறை கொண்டுள்ள மோடி பல்வேறு திட்டங்கள் மற்றும் முதலீடுகளை கொண்டு வர நினைப்பதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவுக்கு வர ஆவலாக உள்ளதாகவும், அடுத்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறினார். ஸ்பேஸ்எக்ஸின் பிராட்பேண்ட் இணைய சேவையான ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளேன். இது கிராமப்புற மக்களுக்கு உதவும்” என எலான் மஸ்க் தெரிவித்தார்.
எலான் மஸ்க் சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எலான் மஸ்கை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எரிசக்தி முதல் ஆன்மீகம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். வர்த்தக சூழலை மேம்படுத்துவதையும், இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவது பற்றி விவாதங்கள் நடைபெற்றன” என மோடி குறிப்பிட்டுள்ளார்.