கனமழை காரணமாக  6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று  விடுமுறை… மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!!

நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் திண்டுக்கல், கோவை, திருப்பூர்,  நீலகிரி,  தேனி  மற்றும் மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழையானது…

நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் திண்டுக்கல், கோவை, திருப்பூர்,  நீலகிரி,  தேனி  மற்றும் மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழையானது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

 

தற்போது தொடர் கனமழை காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,  திருப்பூர் ஆட்சியர் திரு .தா. கிறிஸ்துராஜ்,  நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குன்னூர், குந்தா மற்றும் கோத்தகிரி ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா  மற்றும் தேனி ஆட்சியர்  ஆர்.வி.ஷஜீவனா  ஆகியோர் தொடர் மழை காரணமாக அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.