#Sivakarthikeyan -க்கு வில்லனாகும் பிரபல நடிகர்? யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள ‘புறநானூறு’ படத்தில் ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி ரிலீசாக அக்.31-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள ‘புறநானூறு’ படத்தில் ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி ரிலீசாக அக்.31-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார்.

இப்படம் வெளியான 20 நாட்களில் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையே, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவியும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.