உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் டி.ராஜேந்திரை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்.
திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர்க்கு கடந்த 19ம் தேதி திடீரென
நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது டி.ராஜேந்தரருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் டி ராஜேந்தர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்து இருக்கிறதா? என்பதுதொடர்பான விவரங்களை மருத்துவமனை உயர் அதிகாரிகளோடு முதலமைச்சர் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.