உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டிய ஓட்டுநர் ஒரு கார் மீது மோதிவிட்டு அதை 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், மீரட்டில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஒரு கார் மீது மோதிவிட்டு அதை 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதையடுத்து, மீரட் போலீஸார் அந்த கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கார் மீது கண்டெய்னர் மோதியதையடுத்து, லாரி ஓட்டுநரை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் மற்றும் காரின் ஓட்டுநர் சத்தமிட்ட போதிலும், போதையில் இருந்த வாகன ஓட்டி காரை நீண்ட தூரம் இழுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து மீரிட் போலீஸார் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் உத்தரப் பிரதேச மாநிலம், அலிபூர் மோர்னா பகுதியைச் சேர்ந்த அமித் சிங் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது காரில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றனர்.
-ம.பவித்ரா