நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தை நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்குநர்களாக உள்ள வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் வி.கே.பழனி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை ரத்து செய்யக்கூடாது என அரசு மற்றும் தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு ரத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.