காற்று மாசு காரணமாக மனித ஆரோக்கியம் ஆபத்தனா நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் ஆயுட்காலம் சராசரியாக 6.9 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சமீகத்திய ஆய்வு ஒன்று அறிக்கை அளித்துள்ளது.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் காற்று மாசு குறித்து ஆய்வு நடத்தி காற்றின் தரவரிசை அட்டவணையை வெளியிட்டள்ளது. இதில் இந்தியாவில் ஏற்படுள்ள காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 1.8 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைகிறது என்றும் புகைப்பிடித்தல் காரணமாக 1.5 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைவதாகவும் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டு AQLI இன் ஆய்வின்படி சராசரியாக 9.7 ஆண்டுகள் ஆயுட்காலம் இழந்த டெல்லி மிகவும் மாசுபட்ட மாநிலமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இது நோயின் சுமையைக் குறைப்பதற்காக ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் என்ற பழைய திருத்தப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (WHO) இலக்கை அடிப்படையாகக் கொண்டது என குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு ஆய்வின்படி உத்திரபிரதேசம், பீகார், ஹரியானா மற்றும் திரிபுரா ஆகியவை காற்று மாசுப்பட்ட மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என தெரிவித்துள்ளது.
அதேபோல் போல் உலகளவில், வங்காளதேசத்திற்கு முன்னதாக இந்தியா இரண்டாவது மிகவும் மாசுபட்ட நாடாக உள்ளது என அதிர்ச்சியளித்துள்ளது. மோசமான காற்று காரணமாக 2020 இல் ஆயுட்காலம் 6.9 ஆண்டுகள் குறைக்கப்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளது. இதேபோல், நேபாளம் 4.1 ஆண்டுகள், பாகிஸ்தான் 3.8 ஆண்டுகள் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு 2.9 ஆண்டுகள் தங்களது ஆயுட்காலத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
துகள் காற்று மாசுபாடு உலகளாவிய சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் அல்லது ஒருங்கிணைந்த 17 பில்லியன் ஆயுட்காலம் எடுக்கும் என்று AQLI கண்டறிந்துள்ளது. ஆயுட்காலம் மீதான தாக்கம் புகைப்பழக்கத்துடன் ஒப்பிடத்தக்கது, மது அருந்துதல் மற்றும் பாதுகாப்பற்ற தண்ணீரை விட மூன்று மடங்கு அதிகமாகவும் என தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயை விட ஆறு மடங்கு அதிகமாகவும், மோதல் மற்றும் பயங்கரவாதத்தை விட 89 மடங்கு அதிகமாகவும் உள்ளது என ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் அனைவரும் சராசரி துகள் மாசு அளவு வரம்பை மீறும் பகுதிகளில் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 63% க்கும் அதிகமான மக்கள் நாட்டின் சொந்த தேசிய வருடாந்திர காற்றின் தரமான ஒரு கன மீட்டருக்கு 40 மைக்ரோகிராம்களைத் தாண்டிய பகுதிகளில் வாழ்வதாக சொல்கிறது. 1998 முதல், சராசரி ஆண்டு துகள் மாசுபாடு 61.4% அதிகரித்துள்ளது, இது சராசரி ஆயுட்காலம் 2.1 ஆண்டுகள் மேலும் குறைக்க வழிவகுத்தது என்றும், 2013ஆம் ஆண்டு முதல் உலக அளவில் மாசு அதிகரிப்பில் 44% இந்தியாவில் இருந்து வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டு முதல் இந்த குழு தனது ஆய்வை நடத்தியுள்ளது. அப்போது, புதிய மற்றும் திருத்தப்பட்ட செயற்கைக்கோள்-பெறப்பட்ட தரவுகளின்படி, உலகளாவிய மக்கள்தொகையின் சராசரி 2.5 அளவு 2019 மற்றும் 2020 க்கு இடையில் சிறிது குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஒரு கன மீட்டருக்கு 27.7 முதல் 27.5 மைக்ரோகிராம்கள் குறைந்துள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்