10 ஆண்டு கால தடையை கடந்து ஆடு ஜீவிதம் திரைப்படம் 28ஆம் தேதி வெளியாகிறது.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ‘ஆடுஜீவிதம்’ நாவல் (தி கோட் லைப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர். பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற 28 -ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. மலையாளத்திலிருந்து தமிழிலும் ‘ஆடுஜீவிதம்’ நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாடமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.