கரை ஒதுங்கிய 47 அடி திமிங்கலம்; உயிர்கொடுத்த மீட்புக்குழு | வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் கரை ஒதுங்கிய திமிங்கலம் பத்திரமாக கடலுக்குள் விடப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் உள்ள கணபதிபுலே கடற்கரையில் 47 அடி நீளமுள்ள திமிங்கலக் குட்டி ஒன்று சிக்கிக் கொண்டது. சுமார் நான்கு…

மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் கரை ஒதுங்கிய திமிங்கலம் பத்திரமாக கடலுக்குள் விடப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் உள்ள கணபதிபுலே கடற்கரையில் 47 அடி நீளமுள்ள திமிங்கலக் குட்டி ஒன்று சிக்கிக் கொண்டது. சுமார் நான்கு டன் எடை கொண்ட இந்த திமிங்கலக் குட்டி திங்கள்கிழமை கரைக்கு வந்தது.

இங்கு கடல் நீ திடீரென குறைந்ததால், கடற்கரை மணலில் திமிங்கலக் குட்டி சிக்கிக் கொண்டது.  திமிங்கலம் எதிர்பாராத விதமாக மணல் திட்டில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் கடற்படையினர் மற்றும் வனத்துறையினரால் திமிங்கலம் கடலில் விடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.