சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில், பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில், நாளை முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை, ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற உள்ளது. உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் இல்லை, என உத்தரவிட்டனர்.
கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும், என அறிவுறுத்திய நீதிபதிகள், விழாவில் பங்கேற்க பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர். முன்னுரிமை அடிப்படையில் 200 பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரையும், 6 மணியில் இருந்து 7 மணி வரையும், தலா 200 பக்தர்களை அனுமதிக்க வேண்டும், எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







