பஞ்சாப்பில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவில் ஏர் கூலர் பொருத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் பகல் நேரத்தில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க புதுவித ஐடியாவை கண்டுபிடித்துள்ளார். அதாவது தனது ஆட்டோவின் பின்புறம் ஏர் கூலர் ஒன்றை பொருத்தி இயக்கி வருகிறார். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி தாமும் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம் என கூறுகிறார் ஆட்டோ ஓட்டுனரான கபீர் செட்டியா. இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஏராளமான பார்வையாளர்களை கடந்த வைரலாகி வருகிறது.