பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களியே விற்றுத் தீர்ந்தன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகையைக் காலங்களில் பொதுமக்களின்
வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகி பண்டிகை தொடங்கி, ஜன. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8மணிக்குத் துவங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. சில ரயில்களில் 30 நிமிடத்திற்குள் முன்பதிவு நிறைவடைந்தது.