31.4 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

தமிழ் படங்கள் கர்நாடகாவில் தடை செய்யப்படுவது ஏன்?-யாஷ்

இந்திய அளவில் 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள கேஜிஎஃப் 2  திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் நடிகர் யாஷ்,  இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் நிருபர் ஒருவர் நடிகர் யாஷிடம் “கன்னட படங்கள் தமிழில் வரும் போது தமிழ் மக்கள் மாபெரும் வரவேற்பு தருகின்றனர். ஆனால், தமிழ் படங்கள் கர்நாடகாவில் வெளியாகும் போது, கன்னட மக்கள் அவ்வளவாக வரவேற்பதில்லையே? நிறைய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தடை கூட வருதே?” என கேள்வியெழுப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு மிகவும் நிதானமாக நறுக்கென பதிலளித்த நடிகர் யாஷ்,“சார் அப்படியிருந்தால் நாங்கள் எப்படி தமிழ் படங்களை பார்த்திருப்போம். பெரும்பாலான தமிழ்படக்களை நான் கன்னட மக்களுடன் தியேட்டரில் தான் கண்டுகளித்துள்ளேன். இதேபோல், கன்னட படங்களை மற்ற மாநிலங்களில் கொண்டாடப்படுவதில்லை என்று கன்னட மக்களுக்குக்கூட வருத்தம் இருந்திருக்கலாம். ஆனால் KGF படத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த அன்பும் வரவேற்பும் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா இப்படி எந்த மாநிலங்களில் படம் வந்தாலும் யாருக்கு பிடிகின்றதே அவர்கள் தாராளமாக தியேட்டர் சென்று பார்க்கலாம். கடந்தகாலத்தில் நடந்த பிரச்சனைகள் குறித்து எனக்கு பரிச்சயம் கிடையாது; நான் அப்போது அங்கு இல்லை, அதை பற்றி பெரிதாக எனக்கு தெரியாது. ஆனால், வரக்கூடிய காலங்களில் யார் எந்த படத்தை பார்க்கவேண்டும் என யாராலும் கட்டுப்படுத்தமுடியாது என்பதை நான் திடமாக நம்புகிறேன். வரக்கூடிய காலங்களில் நாம் இதை பாஸிட்டிவாக மாற்றுவோம். எங்கே சென்றாலும் நாம் எல்லாம் இந்தியர்கள் தானே!” என தெரிவித்தார்.

இந்நிலையில்‘நடிகர் யாஷ் கூறுவதுபோல் பெரும்பாலான தமிழ் படங்கள் கன்னட மக்களால் கொண்டாடப்பட்டே வருகிறது. தமிழ் படங்கள் வெளியாகும் போது பெங்களூரில் உள்ள பெரும்பாலான திரையரங்குளில் கூட்டம் கலைகட்டுவதை பார்த்திருக்கிறோம். இருப்பினும் சிலரின் அரசியல் லாபங்களுக்காக தமிழ் படங்களுக்கு எதிராக போரட்டங்கள் நடைபெறுவது உண்டு. அவர்கள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்நிலையில் நடிகர் யாஷின் இந்த கருத்து வரவேற்கத்தக்கது’என சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டில், ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ப் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல், த‌மி‌ழ் ‌திரையுல‌க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌ம் நடைபெற்றது. அப்போது கர்நாடவிற்கு எதிராக ரஜினியும் சரத்குமாரு போட்டி போட்டுக்கொண்டு கடும் விமர்சனத்தை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததோடு தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாடோம் எனவும் கூறி போராட்டங்களை மேற்கொண்டனர். பின்னர் இந்த காரணத்தை முன்வைத்து ரஜினியின் குசேலன், சத்தியராஜின் பாகுபலி உள்ளிட்ட படங்கள் கர்நாடகாவில் வெளியாவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க நேர்ந்ததோடு சத்தியராஜும் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading