உலக கோப்பை இறுதிப் போட்டி | டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு!

டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 13வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.…

டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

13வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

தோல்வியே காணாமல் 10 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடிய இந்திய அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த தொடரில், 8 ஆட்டங்களில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் மோதுகிறது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி தனது அதிரடியை காட்டி ரன்களை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளிலுமே எந்த மாற்றமும் இல்லாமல் அதே 11 வீரர்களே தொடர்கிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.