விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (செப்.7) பொது விடுமுறை என்பதால் சென்னையில் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.
அதன்படி சென்னை சென்ட்ரல் – அரக்கோணம். சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







