அமெரிக்க மாணவரால் கடலில் வீசப்பட்ட பாட்டில் செய்தி ​​26 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்!…

1997ல் கடலில் வீசப்பட்ட பாட்டில் செய்தி ​​26 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பாட்டில் செய்தி பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1997 இன் தொடக்கத்தில், மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் பெஞ்சமின் லியான்ஸ் மற்றும்…

1997ல் கடலில் வீசப்பட்ட பாட்டில் செய்தி ​​26 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பாட்டில் செய்தி பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1997 இன் தொடக்கத்தில், மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் பெஞ்சமின் லியான்ஸ் மற்றும் அவரது வகுப்பு தோழர்கள் சுருக்கமான குறிப்புகளை எழுதி, அவற்றை பாட்டில்களில் வைத்து, மாசசூசெட்ஸிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் பகுதியில் உள்ள Nantucket சவுண்டில் வீசியுள்ளனர் . இப்போது, ​​26 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பாட்டில் செய்தி பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களும் வளர்ந்து பட்டம் பெற்ற நிலையில், கடந்த வாரம் 71 வயதான மீனவர் ஹூபர்ட் எரியோவிடமிருந்து பாட்டிலைக் கண்டுபிடித்த கடிதத்தைப் பெற்றதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில், “தயவுசெய்து திறக்கவும், அதைக் கண்டுபிடித்தவர் மீண்டும் ஒரு செய்தியை அனுப்பவும், அது எங்கே, எப்போது கிடைத்தது என்பதைப் பகிரவும் என அதில் எழுதப்பட்டதை அடுத்து இது கிடைத்ததாகக் கூறப்படுகிறது. 26 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட ஒரு பாட்டில் செய்தி குறித்த தகவல் கிடைத்தால் பெஞ்சமின் லியான்ஸ் மற்றும் அவரது வகுப்பு தோழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.