காடுகளை பாதுகாக்கப் போராடும்  தன்னார்வலர்களின் பட்டியல்!

ஜமுனா துடு  (ஜார்கண்ட்)

தனது வாழ்நாளின் 20 ஆண்டுகளாக அழிந்துவரும் காடுகளுக்கு எதிராக போராடி 50 ஏக்கர் வன நிலத்தை காப்பாற்ற உதவினார்

சசிகாந்த டாஷ் (புதுச்சேரி)

3000 மரங்களுக்கு  மேல் வளர்த்து சிறிய  வனத்தை உருவாக்கியுள்ளார்

வருண் ரவீந்திரன் (கர்நாடகா)

100 ஏக்கர் தரிசு நிலத்தில் 40,000 மரங்களை வளர்த்து பசுமையான சோலையை உருவாக்கி 'வனந்தரா' என பெயரிட்டுள்ளார்

ஜெயஸ்ரீ  (கேரளா)

28 ஆண்டுகளாக 50 மேல் வகையான மரங்களைக் கொண்ட பசுமையான காடுகளை உருவாக்கி, தனது கிராமத்தின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளார் 

மொய்ராங்தெம் லோய்யா  (மணிப்பூர்)

20 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசு மலை பகுதியில் 300 ஏக்கரில் காடுகளை உருவாக்கியுள்ளார்

துளசி கவுடா (கர்நாடகா)

கர்நாடகாவில் உள்ள தரிசு நிலங்களை அடர்ந்த காடுகளாக மாற்றத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்

அப்துல் கரீம் (கேரளா)

27 ஏக்கர் தரிசு நிலத்தை 5000 மரங்கள் கொண்ட செழிப்பான காடாக மாற்றியுள்ளார்