நெருங்கும் கோடைக்காலம்!  கோடையில் கடைப்பிடிக்க வேண்டியவை!

கோடையில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.

பழங்கள், காய்கறிகள், நுங்கு, போன்ற நீர் சத்துடைய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது. கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.

பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.