2 ஆயிரத்து 500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
எடப்பாடி தொகுதியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி, 2021ஆம் ஆண்டு பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். ஜனவரி 4 முதல் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார். தலைமைச் செயலகத்தில் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு வழங்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஒன்று உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக 5 ஆயிரத்து 604 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.