தமிழகம்

2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து விவாதிக்க தயாரா என முதல்வருக்கு ஆ.ராசா கேள்வி!

2ஜி ஸ்பெக்ட்ரம் உட்பட திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேருக்கு நேர் தன்னுடன் விவாதிக்க தயாரா என முதலமைச்சருக்கு ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, திமுக மீது முதலமைச்சர் முன் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை தங்களுடையது என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் முதலமைச்சர் விவசாயியாக இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் குறித்து தெரிந்திருக்கும் என அவர் கூறினார். 2 ஜி வழக்கு உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டு திமுக மீது நிரூபிக்கப்பட்டு இருக்குமானால் நேருக்கு நேர் கோட்டையில் தன்னுடன் விவாதிக்க தயாரா? என்றும் முதலமைச்சருக்கு ஆ.ராசா சவால் விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குளத்தை காணவில்லை என வட்டாட்சியர் அலுவலத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்-வடிவேலு பட பாணியில் சென்னையில் நடந்த ருசிகரம்!

Web Editor

தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பது தான் புதிய தேசிய கல்வி கொள்கை- எல்.முருகன்

Jayasheeba

ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் இறங்கி திருட முயற்சி: வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்

Gayathri Venkatesan

Leave a Reply