26.7 C
Chennai
September 27, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

”வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க கமல் மறுப்பு தெரிவித்ததால் இந்த முடிவெடுத்தேன்”- அருணாச்சலம்!

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், எல்.முருகன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க கேட்டதற்கு கமல் மறுப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனால் பாஜகவில் ஒரு தொண்டனாக தன்னை இணைத்து கொண்டதாக கூறினார். மேலும், விவசாயத்தை பூர்வீகமாக கொண்டவன் என்ற அடிப்படையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், கட்சி தலைமை, விவசாயிகளுக்கு ஆதரவாக செல்லாமல், விரோதமாக சென்றதால், பதவியை உதறிவிட்டு பாஜகவில் இணைந்ததாக அருணாச்சலம் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

உலகக்கோப்பை தொடர்: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு

NAMBIRAJAN

இளையராவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள புதிய படம் காம்ப்ளக்ஸ்

Vel Prasanth

கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை – உயர்நீதிமன்றம்

Halley Karthik

Leave a Reply