வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடந்து ஒருநாள் தொடரை முழுவதுமாக ஒத்திவைப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற டி20 தொடரை 3-0 என இங்கிலாந்து அணி கைப்பற்றியதை தொடர்ந்து முதலாவது ஒரு நாள் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்தது. இதனிடையே தென்னாப்பிரிக்க அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே கடந்த சனிக்கிழமை வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது 2 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து நேற்று முந்தினம் நடைபெறவிருந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடர் முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், திட்டமிடப்பட்ட கிரிக்கெட் தொடரில் ஒரு பாதி மட்டுமே முடிவடைந்துள்ளதாகவும் தற்போதுள்ள சூழலில் வீரர்கள் ஆரோக்யம் நலன் கருதி இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை ஒத்திவைக்க இரு அணி கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.