28.9 C
Chennai
September 27, 2023
ஆசிரியர் தேர்வு குற்றம் தமிழகம்

மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் சிக்கிய நகை, பணக் குவியல்…!

விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் காரில் 100 சவரன் நகைகள் மற்றும் லட்சக் கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட எல்லையான சத்திரரெட்டியபட்டியில் உள்ள சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரியும் கலைச்செல்வியும், அவரது கணவர் ராஜாவும் சென்ற காரை சோதனை செய்தனர். அதில் இருந்த 24 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 100 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், தொடர்ந்து மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் சண்முக ஆனந்த் வந்த காரையும் சோதனை செய்த அதிகாரிகள் அதிலிருந்து 1.43 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதே காரில் இருந்த விருதுநகர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் அருள் பிரசாத் என்பவரிடமிருந்து 7 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அனைவரையும் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

எலக்ட்ரிகல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் சேதம்!

Vandhana

’மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar

தமிழ்நாடு குறித்த சர்ச்சை; ஆளுநர் மாளிகை விளக்கம்

Jayasheeba

Leave a Reply