தமிழகம் செய்திகள்

மனிதஉரிமை மீறல் புகார்: 4 காவலர்களுக்கு விதித்த அபராதத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

பொய் வழக்குப்பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 4 காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் பாபு என்பவர் தனது நண்பர் அசோக் உடன் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் பாலு, போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி பிரவீன் பாபுவை தாக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை பிரவீனின் நண்பர் அசோக் மொபைல் வீடியோ எடுத்ததால் ஆத்திரமடைந்த காவலர் பாலு, அசோக்கையும் தாக்கியுள்ளார். இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்த சென்ற காவலர் பாலு மேலும் மூன்று காவலர்களுடன் இணைந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் இருவரும் கடுமையாக காயமடைந்த நிலையில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியில் வந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பிரவீன் பாபு மற்றும் அசோக் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தனர்.

வழக்கை விசாரித்த ஆணையம், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இருவருக்கும் தலா 1 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டு இந்த தொகையை நான்கு காவலர்களிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டது. மேலும் நான்கு பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்தது.

இதனை எதிர்த்து காவலர்கள் நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி தாக்குதல் நடத்தியது உறுதியானதாக தெரிவித்தனர்.

மனித உரிமை மீறலில் காவலர்கள் ஈடுப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Web Editor

3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் பிரபல ஐடி நிறுவனம்

Web Editor

விழுப்புரம்: கிராமசபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி – பாதியில் எழுந்து சென்ற அமைச்சர் பொன்முடி

EZHILARASAN D