உலகம்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த வைரஸ் தொற்று பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் சுகாதாரப்பணியாளர்கள், உலக தலைவர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. இதுவரை இந்த நோயால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் பொல்செனேரோ ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரிசையில் தற்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் இணைந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று கண்டறியப்பட்டது. அரசின் விதிமுறைகளின் படி அதிபர் மேக்ரோன் ஏழு நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார். எனினும், ஆன்லைன் வாயிலாக அவர் தனது பணிகளை தொடர இருக்கிறார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டோம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்

Web Editor

ChatGPT குறித்து ட்வீட் செய்த எலான் மஸ்க்!

Jayasheeba

’ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கி, சிரியாவுக்கு மீட்பு படைகளை அனுப்பிய இந்தியா

Web Editor

Leave a Reply