28.9 C
Chennai
September 27, 2023
முக்கியச் செய்திகள் குற்றம்

பரமக்குடி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 32 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் வேலுச்சாமிக்கு (32) இதுவரை திருமணம் நடக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு வீட்டில் 5 வயது சிறுமியுடன் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் சிறுமியை தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிறுமி தனியாக இருப்பதை அறிந்த வேலுச்சாமி, அங்கு சென்று சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி, பெற்றோர் வந்தவுடன் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர்
போலீசார் வேலுச்சாமியை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பெண் குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தி இதுபோன்ற சமூக விரோதிகள் பாலியல் தொந்தரவு போன்ற குற்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு பிரியங்காகாந்தி ஆறுதல்!

Niruban Chakkaaravarthi

தனுஷின் ’D50’ படப்பிடிப்பில் நடிகை அனிகா சுரேந்திரன் -லேட்டஸ்ட் அப்டேட்!

Web Editor

14 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

EZHILARASAN D

Leave a Reply