32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணம், சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்திருந்தது என கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகளும் கேட்டுக்கொண்டனர்.

எனவே, சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், முதல்வர் பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்!

Jayapriya

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்; மத்திய அரசு பதில் அளிக்க, உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Web Editor

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி அபார வெற்றி

G SaravanaKumar

Leave a Reply