ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். புள்ளாபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி மற்றும் அவரது மனைவி அருக்காணி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
விசாரணையில், இளைஞர்கள் மதுபோதையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய கிருபா சங்கர், சூர்யா, சாமிநாதன் ஆகியோரை கைது செய்த போலீசார், குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்!
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: