தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 7 லட்சத்து 96 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் புதிதாக 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே நேரத்தில், இன்று ஒரே நாளில் ஆயிரத்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 7 லட்சத்து 74 ஆயிரத்து 306 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 70 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.