சென்னை அருகே அனுமதியின்றி நடத்தி வந்த காப்பகத்தில் இருந்து 9 சிறுவர்,சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
சென்னை சோழிங்கநல்லூர் ஓ எம் ஆர் சாலையில் சீன் டக்ளஸ் லூயிஸ் நினைவு நம்பிக்கை என்கிற அறக்கட்டளை இயங்கி வந்தது. இந்த அறக்கட்டளை முறையாக இயங்கவில்லை எனவும் இங்குள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதி இல்லை எனவும் கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிறுவர் நல காவல் பிரிவு போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், மேரி எனும் மூதாட்டி உரிய அனுமதி இல்லாமல் காப்பகம் நடத்தி வந்ததாகவும், இந்த காப்பகத்தில் இருந்து 4 சிறுமிகள், 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்