28.9 C
Chennai
September 27, 2023
இந்தியா

சிகிச்சையளிப்பதில் போட்டி… ஆத்திரத்தில் மருத்துவமனையை உருக்குலைத்த உறவினர்!

ஹரியானா மாநிலம் குர்காமில் வயதான 2 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் மினி வேனை கொண்டு மருத்துவமனையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குர்கானில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயதான நோயாளிகள் இரண்டு பேரில் யாருக்கு முதலில் சிகிச்சை அளிப்பது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு நோயாளின் உறவினர் ஒருவர், தான் வைத்திருந்த சரக்கு மினி வேனை எடுத்து வந்து மருத்துவமனையின் மீது பலமுறை மோதினார். இதில் மருத்துவமனையில் முகப்பு மற்றும் மருந்தகம் உள்ளிட்டவை முழுவதும் சேதமடைந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரை தொடர்ந்து குர்கான் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

வெளிநாடு வாழ்இந்தியர்களுக்காக பிரத்யேக செயலி; புகார்களை தடையின்றி பதிவு செய்ய தமிழ்நாடு காவல்துறை ஏற்பாடு!

Web Editor

100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?

Jayakarthi

ட்விட்டரில் ‘கோல்டன் டிக்’ அங்கீகாரம் பெற்றது நியூஸ்7 தமிழ்…!

G SaravanaKumar

Leave a Reply