28 C
Chennai
December 7, 2023
ஆசிரியர் தேர்வு தமிழகம்

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணை

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ள புள்ளி விவரங்கள் தேவை என்றும் தமிழக அரசு கருதியது. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்திருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் ஆறு மாத காலத்திற்குள் தனது அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும் எனவும் அந்த குழுவுக்கு தேவையான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலராக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட துறையின் முதன்மைச் செயலாளர் இருப்பார் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy