கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கட்டுப்பாடுகள்:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
➤ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில்
மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு
நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி.
➤ மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
➤ எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து
கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி.
➤ திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50% அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி.
➤ பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதி!
➤ நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும்
அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித
இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம்.