28.9 C
Chennai
September 27, 2023
உலகம்

கொரோனா அதிகரிப்பால் சிறையில் ஏற்பட்ட கலவரம்; கைதிகள் 8 பேர் உயிரிழப்பு, 55 பேர் படுகாயம்!

இலங்கையில் உள்ள சிறை ஒன்றில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து கைதிள் நடத்திய ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

உலக நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த பாதிப்பின் அளவு ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கொலும்புவில் உள்ள மகாரா சிறைச்சாலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதுவரை அந்த சிறையில் 1000 கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக கைதிகள் நேற்று முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் கலவரமாக உருவெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 கைதிகள் உயிரிழந்ததோடு 55 பேர் படுகாயமடைந்தனர். மேலும் சில கைதிகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலவரத்தை தொடர்ந்து சுமார் 200 கமேண்டோ அதிகாரிகள் உட்பட 600 காவல்துறை அதிகாரிகள் சிறையில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த சீனா!

G SaravanaKumar

சார்லஸ் சோப்ராஜ்: ‘பிகினி கில்லர்’ விடுதலை எப்போது? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

EZHILARASAN D

ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் அமர்ந்தபடி தலிபான் போஸ்: வைரலாகும் போட்டோ

EZHILARASAN D

Leave a Reply