அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பதாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதன்மையானதாக அமெரிக்கா இருந்து வருகிறது. அங்கு இதுவரை கொரோனாவால் அங்கு 1 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இங்கு அதிகரிக்கும் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த வாரம் மட்டும் அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது மாநிலங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலால் இந்த ஆண்டு விடுமுறைகாலங்களில் பயணம் செய்ய வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியும் பொதுமக்கள் அதை பின்பற்றாததே வைரஸ் பரவல் அதிகரிப்பு காராணம் என கூறப்படுகிறது.
மேலும் மக்களின் இந்த நடவடிக்கை வைரஸ் பாதிப்பை தொடர்ந்து அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.